கரூர், ஜன. 25: குடியரசு தினத்தை முன்னிட்டு கரூர் அரசு அருங்காட்சியக வளாகத்தில் கட்டுரைப் போட்டி நடைபெற்றது. அருங்காட்சியக வளாகத்தில் நடைபெற்ற கட்டுரைப் போட்டியில் ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். என்னைக் கவர்ந்த விடுதலை போராட்ட தலைவர், உங்களுக்கு பிடித்த தமிழக விடுதலை போராட்ட தலைவர் போன்ற தலைப்புகளில் கட்டுரைப் போட்டி நடைபெற்றது. மேலும், தியாகிகள் தினத்தை முன்னிட்டு அருங்காட்சியக வளாகத்தில் பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
அரசு அருங்காட்சியகத்தில் குடியரசு தின கட்டுரைப்போட்டி மாணவர்கள் பங்கேற்பு
previous post