Friday, May 10, 2024
Home » அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேச்சு பைக் மோதி 2 பேர் படுகாயம்

அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேச்சு பைக் மோதி 2 பேர் படுகாயம்

by Francis

 

கந்தர்வகோட்டை,பிப்.7: புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஒன்றியம், அக்கட்சிப்பட்டி கிராமத்தை சேர்ந்த ராமையா மகன் சுகதேவன் (75), இந்திரா நகரை சேர்ந்த வீரன் மகன் ரங்கராஜ்( 65) இருவரும் 5ம்தேதி இரவு கந்தர்வகோட்டை வட்டாட்சியர் அலுவலகம் அருகே தஞ்சை-புதுகை தேசிய நெடுஞ்சாலையில் நடந்து வந்து கொண்டிருந்தனர். அப்போது கல்லாக்கோட்டை கிராமத்தை சேர்ந்த மாணிக்கம் மகன் வேம்புராஜ் (22), இவர் தனது மோட்டார் சைக்கிளில் புதுக்கோட்டையிலிருந்து கந்தர்வக்கோட்டை நோக்கி வந்து கொண்டிருந்தார்.

எதிர்பாராத விதமாக இருவர் மீதும் மோதியதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தனர். அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கந்தர்வகோட்டை அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்கு புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து கந்தர்வகோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

You may also like

Leave a Comment

eleven − 7 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi