சென்னை: தமிழகத்தில் உள்ள முக்கிய கோயில்களில் வைக்கப்பட்ட சிசிடிவி கேமராக்களில் உள்ள குறைபாடுகளை சரி செய்ய நடவடிக்கை எடுக்காவிட்டால் கோயில் நிர்வாகிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் ஆணையர் குமரகுருபரன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்து சமய அறநிலையத்துறையில் ஒருங்கிணைந்த திருக்கோயில் மேலாண்மை திட்ட செயலாக்கத்தின் ஒரு பகுதியாக தமிழகத்தில் உள்ள முக்கிய கோயில்களின் அன்றாட நிகழ்வுகளை கண்காணிப்பு கேமராக்கள் வழியாக நேரலையாக கண்காணிக்க ஆணையர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறையை கடந்த ஜனவரி 20ம் தேதி முதல்வர் திறந்து வைத்தார். இதன் மூலம் கோயில்களின் அன்றாட நிகழ்வுகளை ஆணையர் குமரகுருபரன் கட்டுப்பாட்டு அறையில் இருந்து இருந்தபடியே கண்காணிக்க முடியும். இந்த நிலையில், ஆணையர் குமரகுருபரன் ஆணையர் கட்டுப்பாட்டு அறையில் இருந்த படி, கோயில்களின் சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தபோது, பல கோயில்களில், சிசிடிவி கேமரா சரியாக வேலை செய்யவில்லை என்பது தெரியவந்தது. குறிப்பாக, சோளிங்கர் நரசிம்மர் கோயில், திருத்தணி சுப்ரமணியசுவாமி கோயில், திருவேற்காடு கருமாரியம்மன் கோயில், காஞ்சிபுரம் தேவராஜசுவாமி கோயில், மாங்காடு காமாட்சியம்மன் கோயில், நாமக்கல் நரசிம்ம சுவாமி கோயில், அர்த்தநாரீஸ்வரர் கோயில், பண்ணாரி அம்மன் கோயில், பட்டீஸ்வரர் சுவாமி கோயில், மாசாணியம்மன் கோயில், சமயபுரம் மாரியம்மன் கோயில், மதுரை மீனாட்சியம்மன் கோயில், திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயில், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில், மதுரை கூடழலகர் கோயில், திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில் உட்பட 47 கோயில்களில் சிசிடிவி கேமராக்கள் சரியாக வேலை செய்யாதது தெரிய வந்துள்ளது.இதை தொடர்ந்து ஆணையர் குமரகுருபரன் மண்டல இணை ஆணையர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: முதல்வர் திறந்து வைக்கப்பட்ட கட்டுப்பாட்டு அறை திட்டத்தினை வெற்றிகரமாக செயல் படுத்த வேண்டியது அனைத்து கோயில் நிர்வாகிகளின் தலையாய கடமை ஆகும். இப்பணிகளில் எவ்வித சுணக்கமும் தடைகளோ ஏற்படின் சம்பந்தப்பட்ட திருக்கோயில் நிர்வாகிகள் மீது ஒழுங்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்படுகிறது.ஆணையர் அலுவலக கட்டுப்பாட்டு அறை பணிகளை கண்காணிக்க நோடல் அலுவலராக ஆணையர் அலுவலக உதவி ஆணையர்-2 கிருஷ்ணகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். கோயில்களில் கண்காணிப்பு கேமராக்கள் கட்டுப்பாட்டு அறையுடன் இணைந்து செயல்படுவதை உறுதி செய்ய அனைத்து முதுநிலை கோயில் நிர்வாகிகளும், நோடல் அலுவலருடன் ஒருங்கிணைந்து செயல்பட கேட்டுக்கொள்ளப்படுகிறது.* அனைத்து முதுநிலை திருக்கோயில்களிலும் இணையத்தள இணைப்பு ஆப்டிக் பைபர் உயர் வேக முறையில் பெற வேண்டும். கண்காணிப்பு காமராக்களுக்கு என பிரத்யோகமாக தனி இணையதள இணைப்பு பெறப்பட வேண்டும்.* பல கோயில்களில் அதிக அளவில் கண்காணிப்பு கேமராக்கள் செயல்பாட்டில் இருந்தபோதும் முழுமையாக என்விஆரில் இணைக்கப்படாமலும், பல என்விஆர்க்கள் இருத்தபோதும் என்விஆர் மட்டுமே கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதை தவிர்த்து அனைத்து என்விஆர்க்களும் முழுமையாக ஆணையர் அலுவலக கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்பட வேண்டும்.* பல கோயில்களில் பழைய முறையிலான அனலாக் கேமராக்கள் உள்ளது. எனவே, அங்கு உயர்தர ஐபி கேமரா பொருத்த வேண்டும். சிலை பாதுகாப்பு அறைஅன்னதான கூடம், தங்கதேர், முடிகாணிக்கை இடம் போன்றவற்றில் கண்டிப்பாக கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும்.* எந்த சூழ்நிலையிலும் கேமராக்களை சுவிட்ச் ஆப் செய்ய கூடாது. கண்காணிப்பு கேமராக்களின் தொழில்நுட்ப கோளாறுகளை உடனுக்குடன் உரிய வல்லுநர்களை கொண்டு சரிசெய்திட வேண்டும். முதல்வரால் திறந்து வைக்கப்பட்ட கட்டுப்பாட்டு அறை திட்டத்தினை வெற்றிகரமாக செயல்படுத்த வேண்டியது அனைத்து கோயில் நிர்வாகிகளின் தலையாய கடமை ஆகும். இப்பணிகளில் எவ்வித சுணக்கமும் தடைகளோ ஏற்படின் சம்மந்தப்பட்ட கோயில் நிர்வாகிகள் மீது ஒழுங்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. பல கோயில்களில் பழைய முறையிலான அனலாக் கேமராக்கள் உள்ளது. எனவே, அங்கு உயர்தர ஐபி கேமரா பொருத்த வேண்டும்….