சென்னை: அதிமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் பட்டியல் இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் சூழ்நிலையில் சென்னையில் ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். தங்கள் ஆதரவாளர்களுடன் தனித்தனியாக ஆலோசனை நடத்தி வருகிறார்கள். அதிமுக இறுதி வேட்பாளர் பட்டியல் மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு எந்தந்த கட்சிகள் என்பது அடையாளம் காணப்படுவதற்கான பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தை எட்டியிருக்கிறது. இன்று அதிகாரபூர்வமாக வெளியிட அதிமுக தலைமை திட்டமிட்டிருக்கிறது. இதன் காரணமாக நேற்று அதிகாலை 2 மணியளவில் பாஜக மற்றும் பாமக-வுடன் எந்தந்த தொகுதிகள் என்பது குறித்து அடையாளம் காண்பதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்றது. பாமக-வுக்கு 23 இடங்கள், பாஜகவுக்கு 20 இடங்கள் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஒருசில தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கும் மற்றும் தங்களுக்கான தொகுதிகளை அடையாளம் காணும் வகையில் பேச்சுவார்த்தையானது நடைபெற்றது. இந்த நிலையில் தற்போது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் அமைச்சர்கள் கே.பி. அன்பழகன், காமராஜ், சி.வி. சண்முகம், தங்கராஜ், வேலுமணி, தங்கமணி ஆகியோருடன் ஆலோசனை மேற்கொண்டிருக்கிறார்கள். பாமக-வை பொறுத்தவரை 23 தொகுதிகளில் ஒருசில தொகுதிக்கு மட்டுமே இன்னும் இறுதி முடிவு எட்டப்படாமல் இருக்கிறது. அந்த தொகுதிகளை இறுதிசெய்துவிட்டால் அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியிடுவதற்கு வாய்ப்பாக அமையும். பாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்து இறுதிசெய்துவிட்டதாகவே தகவல்கள் கிடைக்கப்பெற்றிருக்கின்றன. இந்நிலையில், அடுத்தகட்டமாக அதிமுக-வின் இறுதி வேட்பாளர் பட்டியலை வெளியிடக்கூடிய வகையில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தனது இல்லத்தில், கே.பி. முனுசாமி, வைத்தியலிங்கம் உள்ளிட்ட நிர்வாகிகளுடன் அரைமணி நேரம் ஆலோசனை நடத்தினார். அனைவரும் கட்சி அலுவலகத்திற்கு வந்து இறுதி வேட்பாளர் பட்டியலை வெளியிடுவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் கட்சி அலுவலகத்திற்கு வராமல் இருவரும் அவரவர் இல்லத்திலேயே தனித்தனியாக ஆலோசனை நடத்தி வருகின்றனர். பாமகவிற்கு எந்தெந்த தொகுதிகள் என்பது உறுதி செய்யப்பட்டதற்கு பின் கட்சியின் நிறுவனர் ராமதாஸ், நேரடியாக முதலமைச்சரை சந்திக்க திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. இன்று மாலைக்குள் அதிமுக இறுதி வேட்பாளர் பட்டியல் மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகள் என்பது அனைத்தும் இறுதி செய்யப்பட்டு அதிகாரபூர்வமாக வெளியிட அதிமுக தலைமை திட்டமிட்டு இந்த ஆலோசனையை தீவிரப்படுத்தி வருகிறது….