ஊத்தங்கரை, செப்.6: ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதி அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் எம்எல்ஏ அலுவலகத்தில் நடந்தது. கிழக்கு மாவட்ட செயலாளர் அசோக்குமார் தலைமை வகித்தார். ஊத்தங்கரை எம்எல்ஏ தமிழ்செல்வம், பொதுக்குழு உறுப்பினர் சதீஷ்குமார், முன்னாள் பால்வள தலைவர் தென்னரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், பூத் கமிட்டி அமைப்பது, கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்தும், கட்சி நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கப்பட்டது. இதில், மாவட்ட துணை செயலாளர் சாகுல் அமீது, ஒன்றிய செயலாளர்கள் வடக்கு வேடி, தெற்கு வேங்கன், நகர செயலாளர் சிக்னல் ஆறுமுகம், மாரம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பூமலர் ஜீவானந்தம், உப்பாரப்பட்டி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சாமிநாதன், முன்னாள் சேர்மன் கிருஷ்ணன், நடுப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர்கள் குப்புசாமி, கல்லாவி ராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.