Sunday, May 26, 2024
Home » அதிமுக செய்த தவறால்தான் ஆட்சியை இழந்தனர் விஜயபிரபாகரனுக்கு தேமுதிகவில் பதவியா? பிரேமலதா பரபரப்பு பேட்டி

அதிமுக செய்த தவறால்தான் ஆட்சியை இழந்தனர் விஜயபிரபாகரனுக்கு தேமுதிகவில் பதவியா? பிரேமலதா பரபரப்பு பேட்டி

by kannappan

சென்னை: மகன் விஜயபிரபாகரனுக்கு தேமுதிகவில் பதவி வழங்கப்படுமா என்பது குறித்து பிரேமலதா விளக்கம் அளித்துள்ளார். தேமுதிகவின் ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகள் கூட்டம் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் 3 நாட்கள் நடந்தது. கூட்டத்திற்கு தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமை தாங்கினார். கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சி, உட்கட்சி தேர்தல் குறித்து விவாதிக்கப்பட்டது. அவைத்தலைவர் இளங்கோவன், கொள்கை பரப்பு செயலாளர் அழகாபுரம் ஆர்.மோகன்ராஜ், துணை செயலாளர்கள் எல்.கே.சுதீஷ், பார்த்தசாரதி, ஏ.எஸ்.அக்பர் மற்றும் ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு பிறகு தேமுதிக பொருளாளர் பிரேமலதா அளித்த பேட்டி: தேமுதிகவின் உட்கட்சி தேர்தல் இன்னும் ஒருவார காலத்தில் தமிழகம் முழுவதும் நடத்தப்படும். ஆகஸ்ட் 25ம் தேதி தேமுதிக தலைவர் விஜயகாந்தின் 70வது பிறந்தநாள். அவரின் பிறந்தநாள் தமிழகம் முழுவதும் வறுமை ஒழிப்பு தினமாக, ஏழை எளிய மக்களுக்கு உதவும் வகையில் எழுச்சியாக கொண்டாடப்படும். செப்டம்பர் 14ம் தேதி தேமுதிகவின் 18வது ஆண்டு துவக்க விழா வருகிறது. இதை முடித்து கட்சியின் செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தை தலைமை கழகம் அறிவிக்கும். செயற்குழு, பொதுக்குழுவுக்கு விஜயகாந்த் வருவார்.ஆலோசனை கூட்டத்தில் விஜய பிரபாகரனுக்கு பதவி வழங்க வேண்டும் என்று எல்லாரும் சொல்லியிருக்கிறார்கள். அதேபோல எனக்கும் செயல் தலைவர் பதவி வழங்க வேண்டும் என்று எல்லாரும் கூறியிருக்கிறார்கள். அதை விஜயகாந்த் தான் முடிவு செய்வார். இங்கு எல்லா பதவிகளுமே விஜயகாந்த் முடிவு பண்ணுவதுதான். அதனால், யாருக்கு எந்த பதவி எப்போது கொடுக்க வேண்டும் என்பது விஜயகாந்துக்கு தெரியும். அதிமுக செய்த தவறால் தான் அவர்கள் ஆட்சியை இழந்துள்ளனர். 6 மாதத்திற்கு முன்னாடியே தேமுதிகவில் இருந்து பேசினோம். இப்போதே தேர்தல் வேலையை ஆரம்பிப்போம் என்று சொன்னோம். ஆனால், அதை அவர்கள் மிஸ் பண்ணி விட்டார்கள். மிஸ் பண்ணினதின் விளைவு இன்றைக்கு அவர்கள் ஆட்சியை இழந்திருக்கிறார்கள். இது தான் உண்மை. ஜூலை 3ம் தேதி தர்மபுரியில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம். அதனால், தேமுதிக தான் உண்மையான எதிர்க்கட்சி. இவ்வாறு அவர் கூறினார்….

You may also like

Leave a Comment

10 − five =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi