Tuesday, May 21, 2024
Home » அதிமுக ஆட்சியில் வாங்கிய தரமற்ற வீல்சேரை திரும்ப பெறக்கோரி வழக்கு

அதிமுக ஆட்சியில் வாங்கிய தரமற்ற வீல்சேரை திரும்ப பெறக்கோரி வழக்கு

by kannappan

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில், தண்டுவட காயமடைந்தோர் அமைப்பு சார்பில் தொடரப்பட்ட பொதுநல வழக்கில், தசைச் சிதைவு மற்றும் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களுக்கு 2015 முதல் வழங்கப்பட்ட பேட்டரியால் இயக்கப்படும் வீல் சேர்கள் தரமற்றவை. அவற்றை கொள்முதல் செய்ய பெங்களூரைச் சேர்ந்த குறிப்பிட்ட நிறுவனத்துக்கு மட்டுமே அந்த டெண்டர் வழங்கப்பட்டது. பேட்டரியில் இயக்கப்படும் வீல் சேர்கள் தரமானவையா என்று சோதனை செய்து பார்க்க அறிவியல்பூர்வமான நடைமுறை பின்பற்றப்படவில்லை. தரமற்ற இந்த வீல் சேர்கள் பயன்படுத்தியதால், மாற்றுத்திறனாளிகள் மேலும் பாதிக்கப்பட்டுள்ளனர். பழுதடைந்த வீல் சேர்களை, சர்வீஸ் செய்வதற்கு எந்த  சேவை நிலையங்களும் இல்லை. எனவே, கடந்த  ஆட்சியின்போது வழங்கப்பட்ட பேட்டரி வீல் சேர்களை திரும்பப்பெற வேண்டும். இதனால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். இனிமேல் வாங்கக்கூடிய வீல்சேர்களை ஆய்வு செய்ய ஐஐடி அல்லது அண்ணா பல்கலைக்கழக நிபுணர் குழுவை அமைக்க வேண்டும் என்றும் கோரப்பட்டிருந்தது. இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இதுகுறித்து தமிழக அரசு 6 வாரத்துக்குள் பதிலளிக்குமாறு உத்தரவிட்டனர்….

You may also like

Leave a Comment

5 × four =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi