பாலக்கோடு, ஆக.10: பாலக்கோடு பகுதியில் சூதாட்டம் நடப்பதாக, டிஎஸ்பி சிந்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில், பாலக்கோடு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது காவாப்பட்டி புளியமரத்தடியில் சூதாடி கொண்டிருந்த வேளாவல்லியை சேர்ந்த தமிழரசன் (23), மாதேஷ் (45), காவாப்பட்டியை சேர்ந்த விக்னேஷ்(23), சிவா(28) ஆகியோரை கைது செய்தனர். அதே போல், பாலக்கோடு தக்காளி மார்க்கெட் அருகே சூதாடிய முத்துகவுண்டர் தெருவை சேர்ந்த சத்தியராஜ்(28), வேல்முருகன்(45), தீர்த்தகிரி நகரை சேர்ந்த சரவணன்(38), சுகுமார்(40) ஆகியோரை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்த சீட்டு கட்டுகள், 3 டூவீலர்களை பறிமுதல் செய்தனர்.