அரியலூர், ஏப்.26:அரியலூர் பேருந்து நிலையம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் 70-க்கும் மேற்பட்ட குடிமனைகளுக்கு பாதை வசதிக் கேட்டு நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில், அரியலூர் நகராட்சி பின்புறம் சர்வே எண் 603/ 1-இல் உள்ள 70-க்கும் மேற்பட்ட குடிமனைகளுக்கு செல்ல பாதை வசதி செய்து கொடுக்க வேண்டும்.
சர்வே எண் 602ல் உள்ள பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.ஆர்ப்பாட்டத்துக்கு, அக்கட்சியின் மாவட்டச் செயலர் இளங்கோவன் தலைமை வகித்தார். நாகை சட்டப் மன்ற உறுப்பினர் மாலி, மாநிலக் குழு உறுப்பினர் லாவண்டினா, சிற்றம்பலம் ஆகியோர் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் மணிவேல், கிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு முழக்கமிட்டனர்.