பெரம்பலூர்,ஏப்.26: பெரம்பலூர் வட்டார வளமையத்தில் ஆயிரமாயிரம் அறிவியல் திருவிழா பமிற்சி பட்டறை நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்டம் பெரம்பலூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட இல்லம் தேடிக் கல் வியில் தன்னார்வலர்க ளி ல் தேர்ந்தெடுக்கப்பட்ட 30 தன்னார்வலர்களுக்குபெரம்பலூர் வட்டார வள மையத்தில், வானவில் மன் றம் மூலம் ஆயிரம் ஆயிரம் அறிவியல் திருவிழா பயி ற்சி பட்டறை நேற்று காலை 9.30 மணிமுதல் மாலை 4.30 மணி வரை நடைபெற்றது. பெரம்பலூர் வட்டார வள மைய மேற்பார்வையாளர் தேவகி மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஐயப் பன், வட்டார ஒருங்கிணை ப்பாளர் ரமேசு, நீரில் குத்து விளக்கி ஏற்றி வைத்து தொடங்கி வைத்தனர்.
இப்பயிற்சியில் மாணவர்களு க்கு அறிவியல் மற்றும் கணிதத் திறனில் ஆர்வம் வருவதற்கான, செய்து கற் றல் முறையில் நடன பலூன், காற்றழுத்தம், அமி லத்தன்மை, உடைக்கப்ப டாத பலூன், பலூன் ராக் கெட், வாழ்விடத்தின் வரை ப்படம், மாய எழுத்துக்கள், மிதக்கும் குண்டுசி. தண்ணீர் ஊற்றுதல், நீர் பரிமா ற்றம், நிலையான மின்சா ரம், கற்பனையும் கைத்திற னும் மற்றும் தலைவர்க ளின் பாடல்கள், கணித புதி ர்கள், விடுகதைகள் போன் ற செயல்பாடுகள் செய்து காண்பிக்கப்பட்டு பயிற்சி வழங்கப்பட்டது. இப்பயிற் சியினை மண்டல அளவில் பயிற்சி பெற்ற வானவில் மன்ற கருத்தாளர்கள் வசந்தி, தனலட்சுமி ஆகியோர் அளித்தனர்.