சென்னை: அவதூறு வீடியோக்களை யூடியூபில் வெளியிட்டு களங்கம் விளைவித்ததாக கூறி, யூடியூபர் ஜோ மைக்கேல் பிரவீன் என்பவருக்கு எதிராக அதிமுக செய்தி தொடர்பாளரான திருநங்கை அப்சரா ரெட்டி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மான நஷ்டஈடு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சதீஷ்குமார், அப்சரா ரெட்டிக்கு 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க ஜோ மைக்கேல் பிரவீனுக்கு உத்தரவிட்டார். இதை எதிர்த்து அவர் மனு செய்தார். ஆனால் நீதிபதி, பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய முடியாது என்று கூறி தள்ளுபடி செய்தார்.