டெல்லி: யூடியூபர் மணீஷ் காஷ்யப் மீதான தேச பாதுகாப்பு வழக்கை ரத்து செய்ய உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. தேச பாதுகாப்பு பிரிவின் கீழ் உள்ள வழக்குகள் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தை ஏன் அணுகக்கூடாது என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மணீஷ் காஷ்யப் மீது தமிழ்நாட்டில் 6 வழக்குகளும், பீகாரில் 12 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரப்பியதாக யூடியூபர் மணீஷ் காஷ்யப் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.