Saturday, May 11, 2024
Home » சாந்தோம் பகுதியில் சுற்றிவளைத்த போது தனிப்படையினரை கத்திமுனையில் மிரட்டிய ரவுடி கைது: கொலை வழக்கில் 5 ஆண்டு தலைமறைவாக இருந்தவர்

சாந்தோம் பகுதியில் சுற்றிவளைத்த போது தனிப்படையினரை கத்திமுனையில் மிரட்டிய ரவுடி கைது: கொலை வழக்கில் 5 ஆண்டு தலைமறைவாக இருந்தவர்

by Karthik Yash

சென்னை: காசிமேடு பகுதியை சேர்ந்தவர் மதன் (35). இவர் மீது 3 கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. கொலை வழக்கு ஒன்றில் கடந்த 5 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்தார். இவரை பிடிக்க காசிமேடு போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இந்நிலையில் ரவுடி மதனின் செல்போன் சிக்னல்களை வைத்து ஆய்வு செய்த போது, அவர் கிண்டியில் பதுங்கி இருப்பதாக தனிப்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி தனிப்படையினர் கிண்டியில் முகாமிட்டு ரவுடி மதனை பின் தொடர்ந்து வந்தனர். சுதாரித்துக்கொண்ட ரவுடி மதன் ஆட்டோ ஒன்றில் தப்பி ஓடினர். ஆனால் தனிப்படை போலீசார் ஆட்டோவை பின் தொடர்ந்து சாந்தோம் பகுதியில் வழிமறித்தனர்.

அப்போது ரவுடி மதன் திடீரென கையில் வைத்திருந்த கத்தியை எடுத்து, தன்னை பிடித்தால் கொலை செய்துவிடுவேன் என்று தனிப்படையினரை மிரட்டியுள்ளார். இதை பார்த்த பொதுமக்கள் ஒன்று கூடினர். அவர்களையும் அருகில் வந்தால் குத்தி விடுவேன் என்று கூறியபடி ஆட்டோவில் மீண்டும் தப்ப முயன்றார். ஆனால் தனிப்படையினர் பட்டினப்பாக்கம் போலீசார் உதவியுடன் அவரை சுற்றி வளைத்து பிடித்தனர். இதனால் சிறிது நேரம் சாந்தோம் பகுதியில் பரபரப்பும், போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. பின்னர் பிடிபட்ட ரவுடி மதனை காசிமேடு காவல் நிலைய தனிப்படையினர் ஆட்டோ ஒன்றில் ஏற்றி சென்றனர்.

You may also like

Leave a Comment

seven + seventeen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi