ஆஸ்திரேலிய வீரர் கிளென் மேக்ஸ்வெல் நேற்று நெதர்லாந்துக்கு எதிராக 40 பந்தில் 8 பவுண்டரி, 8 சிக்சருடன் சதம் விளாசி அசத்தினார். இது உலக கோப்பையில் அடிக்கப்பட்ட அதிவேக சதமாக சாதனை படைத்தது. இதே தொடரில், இதே மைதானத்தில் (டெல்லி) இலங்கைக்கு எதிராக தென் ஆப்ரிக்க வீரர் மார்க்ரம் 49 பந்தில் சதம் அடித்து படைத்த சாதனையை மேக்ஸி முறியடித்தார். ஒருநாள் போட்டிகளில் இது 4வது அதிவேக சதமாகும். முன்னதாக… தென் ஆப்ரிக்காவின் டி வில்லியர்ஸ் (31 பந்து), நியூசிலாந்தின் கோரி ஆண்டர்சன் (36 பந்து), பாகிஸ்தானின் ஷாகித் அப்ரிடி 37 பந்தில் சதம் விளாசி முதல் 3 இடங்களில் உள்ளனர்.
உலக கோப்பையில் அதிவேக சதம்
previous post