சென்னை: சென்னையில் உள்ள வீட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா வாழ்த்து பெற்றார். உலக செஸ் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்று பிரக்ஞானந்தா சாதனை படைத்திருந்தார். உலக செஸ் தொடரில் வென்ற பதக்கத்தை முதலமைச்சரிடம் காண்பித்து மகிழ்ச்சி அடைந்தார். முன்னதாக பிரக்ஞானந்தாவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவிற்கு முதலமைச்சர் தேநீர் விருந்து அளித்தார்.