கடத்தூர்: கடத்தூர் கிளை நூலகத்தில், உலக புத்தக நாள் விழாவில் கருத்தரங்கம் நடந்தது. நிகழ்ச்சிக்கு குறள் மொழி பதிப்பக உரிமையாளர் புலவர் மலர்வண்ணன் தலைமை வகித்தார். வாசகர் வட்ட தலைவர் டாக்டர்.சந்திரசேகரன், திருவள்ளுவர் பொத்தக உரிமையாளர் புலவர் நெடுமிடல் முன்னிலை வகித்தனர். மாவட்ட நூலக அலுவலர் மாதேஸ்வரி சிறப்புரையாற்றினார். தொடர்ந்து நடைபெற்ற கருத்தரங்கில் படைப்பாளர், பதிப்பாளர் – நூலகர் என்னும் தலைப்பில், தர்மபுரி மாவட்ட படைப்பாளர் பதிப்பாளர் சங்க பொருளாளர் அறிவுடைநம்பி, மாணவர் முன்னேற்றத்தில் பொது நூலகத்தின் பங்கு என்னும் தலைப்பில் ஆசிரியர் வேல்முருகன், நூலகங்களின் சேவைகள் மேம்படுத்த வேண்டியதன் அவசியம் என்னும் தலைப்பில் நூலகர் சரவணன் கருத்துரையாற்றினர். முன்னதாக நூலகர் முருகன் வரவேற்றார். ராதாகிருஷ்ணன் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் முருகன், கணேசன், மகாலிங்கம், அன்பழகன் உள்ளிட்ட வாசகர்கள் கலந்து கொண்டனர்.
உலக புத்தக நாள் விழா
previous post