டெல்லி: தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாக பதிவிட்ட விவகாரத்தில் பாஜக பிரசாந்த் உம்ராவ்-ன் வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது. தன் மீதான FIRகளை ரத்து செய்யக்கோரிய பாஜக செய்தி தொடர்பாளர் பிரசாந்த் உம்ராவ் மனு முடித்து வைக்கப்பட்டுள்ளது. விசாரணை அறிக்கை மற்றும் குற்றப்பத்திரிகை விரைவில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என தமிழ்நாடு அரசு தகவல் தெரிவித்த நிலையில் பிரசாந்த் உம்ராவ் தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் முடித்து வைத்தது.