Tuesday, May 21, 2024
Home » வடசென்னை அனல் மின் நிலையத்தில் தொழிலாளி பலி

வடசென்னை அனல் மின் நிலையத்தில் தொழிலாளி பலி

by Ranjith

பொன்னேரி: மீஞ்சூர் அடுத்த வடசென்னை அனல் மின் நிலையத்தின் கட்டுமான பணிகளில் ஈடுபட்டிருந்த வடமாநில தொழிலாளி கூலிங் டவரில் இருந்த தவறி கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டில் வடசென்னை அனல் மின் நிலையத்தின் 3வது நிலையின் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில், பணியாற்றி வந்த சட்டீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த நேவல் சிங்(24). இவர் ஒப்பந்த ஊழியர். கட்டுமான பணிகளில் ஈடுப்பட்டு வந்தார். இந்நிலையில், இவர் நேற்று காலை கூலிங் டவரில் இருந்து தவறி கீழே விழுந்ததில் படுகாயமடைந்தார்.

இவரின் அலறல் சத்தத்தை கேட்ட அங்கிருந்தவர்கள், உடனடியாக அவரை மீட்டு திருவொற்றியூர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மீஞ்சூர் போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

You may also like

Leave a Comment

5 × five =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi