சென்னை: கலைஞர் மகளிர் உரிமை திட்டம் அமலாக்கத்துக்காக 8 தாசில்தார் மற்றும் 101 துணை தாசில்தார் பணியிடங்கள் உருவாக்கம் செய்யப்பட்டுள்ளது. 8 சிறப்பு தாசில்தார், 101 துணை தாசில்தார் பணியிடங்களை உருவாக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு செய்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் 1.06 கோடி பேருக்கு கலைஞர் மகளிர் உரிமை தொகை வழங்கப்பட்டு வருகிறது. திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த கூடுதல் பணியாளர்களை நியமித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு செய்துள்ளது.