சென்னை: மகளிர் உரிமைத் தொகையை பிச்சை என்று கொச்சைப்படுத்திய நடிகை குஷ்புவுக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர். பா.ஜ.க.வைச் சேர்ந்த குஷ்புவை கண்டித்து அவரது உருவப்படத்தை எரித்து பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மகளிர் உரிமைத் தொகையை கொச்சைப்படுத்திய குஷ்பு பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று முழக்கங்களை எழுப்பிவருகின்றனர். மகளிர் உரிமைத் தொகையை பிச்சை என்று கொச்சைப்படுத்திய நடிகை குஷ்புவுக்கு கார்த்தி சிதம்பரம் எம்.பி. கண்டனம் தெரிவித்துள்ளார்.