Saturday, July 27, 2024
Home » ரூ.170 கோடி நன்கொடை அளித்த பெண்!

ரூ.170 கோடி நன்கொடை அளித்த பெண்!

by Porselvi

இந்தியாவிலேயே அதிக நன்கொடை அளித்த பெண் என்ற பெருமையை ரோஹிணி நிலேகனி பெற்றுள்ளார்.2023ஆம் ஆண்டில் நன்கொடை வழங்கிய இந்திய பெண்கள் பட்டியலை எடல்கிவ் ஹுருன் இந்தியா அமைப்பு வெளியிட்டுள்ளது. இதில், நாட்டின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்போசிஸ் நிறுவனர்களில் ஒருவரான நந்தன் நிலேகனியின் மனைவி ரோஹிணி நிலேகனி முதலிடம் பிடித்துள்ளார். இவர் கடந்த ஆண்டில் மட்டும் ரூ.170 கோடி நன்கொடை வழங்கியிருக்கிறார். 2022 ஆம் ஆண்டில் ரூ.120 கோடி நன்கொடை வழங்கி உள்ளார்.

Edelgive Hurun India Philanthropy (Hurun philanthropist list 2023) வியாழக்கிழமை வெளியிட்ட பட்டியலின்படி, 2022-23 நிதியாண்டில் அதிக நன்கொடை அளித்த இந்தியப் பெண் இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் நந்தன் நிலேகனியின் மனைவி ரோஹிணி நிலேகனி என வெளியிட்டிருக்கிறது. மும்பையில் வளர்ந்த ரோஹிணி, எல்பைன்ஸ்டோன் கல்லூரியில் பிரெஞ்சு இலக்கியத்தில் பட்டம் பெற்றவர். பத்திரிகையாளராக தனது வாழ்க்கையை தொடங்கிய இவர், புகழ்பெற்ற ஊடக நிறுவனத்தில் பணியாற்றினார். 1981ஆம் ஆண்டு நந்தன் நிலேகனிக்கும் ரோஹிணிக்கும் திருமணம் நடந்தது. அதே ஆண்டில்தான் நந்தன் நிலேகனி 6 பேருடன் சேர்ந்து இன்போசிஸ் நிறுவனத்தை தொடங்கினார். இதற்காக தன்னிடமிருந்த ரூ.10 ஆயிரத்தையும் வழங்கி உள்ளார் ரோஹிணி. அதன் பிறகு இன்போசிஸ் நிறுவனம் அசுர வளர்ச்சி அடைந்தது. இதையடுத்து ரோஹிணியின் பங்கு மதிப்பு உயர்ந்து அவருடைய தனிப்பட்ட சொத்து மதிப்பு பலமடங்கு உயர்ந்தது. நந்தன் நிலகனியின் சொத்து மதிப்பு ரூ. 25,765 கோடியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

ரோஹிணியைப் போலவே, அவரது கணவர் நந்தன் நிலேகனியும் நன்கொடையாளர்களின் டாப்-10 பட்டியலில் உள்ளார். இந்தியர்களுக்கு விசா தேவையில்லை., இலங்கையை தொடர்ந்து மற்றொரு நாடு அறிவிப்பு கணவர் நந்தன் நிலேகனியும் நன்கொடையாளர்கள் பட்டியல் முன்னிலை வகிக்கிறார். அவரும் இந்தியாவிலேயே அதிக நன்கொடை அளித்தவர் பட்டியலில் 8வது இடத்தில் உள்ளார். நந்தன் நிலேகனி கடந்த நிதியாண்டில் ரூ.189 கோடிகளை நன்கொடையாக அளித்துள்ளார்.எழுத்தாளரான ரோஹிணி ‘ஸ்டில்பார்ன்‘,அன்காமன் கிரவுண்ட்‘, ‘ தி ஹங்ரி லிட்டில் ஸ்கை மான்ஸ்டர்‘ உள்ளிட்ட புத்தகங்களையும் எழுதியிருக்கிறார். சூழலியல் குறித்து அதிகம் அக்கறைக் கொண்ட ரோகினி வருடம் தோறும் ரூ.50 கோடி வரை சூழல் நலனிற்காக செலவிடுகிறார் ரோஹிணியை அடுத்து, அனு ஆகா மற்றும் Thermax குடும்பம் ரூ.23 கோடியும், அதைத் தொடர்ந்து USVயின் லீனா காந்தி திவாரியும் ரூ.23 கோடியும் நன்கொடை அளித்துள்ளனர்.

You may also like

Leave a Comment

three × two =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi