ஈரோடு: கரூர்பரமத்தி அருகே ஈரோட்டை சேர்ந்த பெண் பேரூராட்சி கவுன்சிலர் ரூபா கொலையான சம்பவத்தில் தம்பதி கைது செய்யப்பட்டுள்ளனர். கரூர் நொய்யலில் டீக்கடை நடத்திவரும் தம்பதி ரூபாவை கொலை செய்ததாக காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். கடன் பிரச்னையில் இருந்த தம்பதி ரூபாவை கொலைசெய்து அவர் அணிந்திருந்த நகைகளை கொள்ளையடித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.