தஞ்சை: நடப்பாண்டு குறுவை சாகுபடிக்காக உரிய காலமான ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படும் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார். தஞ்சை பூதலூரில் ரூ.90 கோடியில் தூர்வாரும் திட்டத்தை நீர்வளத்துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்
பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்:
கடைமடை பகுதி வரை காவிரி நீர் சென்றடையும் வகையில் பாசன ஆறுகள், வாய்க்கால்கள் முழுமையாக தூர்வாரப்படும். நடப்பாண்டு குறுவை சாகுபடிக்காக வழக்கம் போல் ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் தற்போது 101.1 அடியாக உள்ளது. மேட்டூர் அணையின் நீர் இருப்பு 67 டி.எம்.சி.யாக உள்ளதால் தண்ணீர் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.