Saturday, May 18, 2024
Home » வலங்கைமான் பகுதியில் நிலத்தடி நீரை பயன்படுத்தி 60 சதவீத சம்பா சாகுபடி பணிகள் நிறைவு

வலங்கைமான் பகுதியில் நிலத்தடி நீரை பயன்படுத்தி 60 சதவீத சம்பா சாகுபடி பணிகள் நிறைவு

by Lakshmipathi

*40% வயல்கள் மேய்ச்சல் நிலமானது

வலங்கைமான் : வலங்கைமான் பகுதியில் நிலத்தடி நீரை பயன்படுத்தி 60 சதவீத சம்பா சாகுபடி பணிகள் நடைபெற்றுள்ளது. ஆனால் உரிய நீர் இல்லாத காரணத்தால் பல்வேறு இடங்களில் சாகுபடி பணிகள் தொடங்காமல் தரிசாகவே கிடக்கிறது. இதனால் இலக்கை அடைய முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.வலங்கைமான் தாலுககாவில் உள்ள 71 வருவாய் கிராமங்கள் குடமுருட்டி ஆறு, வெட்டாறு, வெண்ணாறு மற்றும் முக்கிய பாசன வடிகால் ஆறான சுள்ளன் ஆறு மூலம் பாசன வசதி பெறுகிறது. பாசனத்திற்கு தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், மின்மோட்டார்கள் உள்ள விவசாயிகள் சம்பா சாகுபடி பணிகளை துவங்கி ஆர்வத்துடன் செய்து வருகின்றனர்.

நடப்பாண்டு 10 ஆயிரம் ஹெக்டேர் சம்பா சாகுபடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டு ள்ளது. சம்பா சாகுபடியில் நேரடி விதைப்பு மற்றும் கை நடவு இயந்திரம் நடவு ஆகிய முறைகளில் சாகுபடி பணிகள் நடைபெறுவது வழக்கம். ஆட்கள் பற்றாக்குறை மற்றும் நிர்வாகச் செலவு குறைவு உள்ளிட்ட காரணங்களால் விவசாயிகள் நேரடி விதைப்பில் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். வலங்கைமான் பகுதியில் கடந்த 15 தினங்களுக்கு மேலாக மழை பெய்யாததை அடுத்து சுமார் 10 சதவீத அளவிற்கு நேரடி விதைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை துவங்கிய பின் மேலும் 20 சதவீத அளவிற்கு நேரடி விதைப்பு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இயந்திர நடவு இதுவரை சுமார் 20 சதவீதம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வழக்கமான கை நடவு மூலம் வடமாநில தொழிலாளர்கள் உதவியுடன் சுமார் 30 சதவீதம் அளவிற்கு கை நடவு முடிவு பெற்றுள்ளது.

நிலத்தடி நீரை பயன்படுத்தி இதுவரை வலங்கைமான் தாலுகாவில் சுமார் 60 சதவீதம் அளவிற்கு சம்பா சாகுபடி பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது 40 சதவீத பகுதிகளை சம்பா சாகுபடி பணிகள் எனும் துவங்காத நிலையில் அக்டோபர் மாதத்திலும் கூட வலங்கைமான் பகுதியில் விளை நிலங்கள் தற்போது மேய்ச்சல் நிலமாக காட்சி அளிக்கிறது. வடகிழக்கு பருவமழை துவங்கிய பின் சுமார் 20 சதவீத கூடுதலாக சம்பா சாகுபடி பணிகள் நடைபெற வாய்ப்புள்ளது இருப்பினும் வலங்கைமான் தாலுகாவில் நடப்பாண்டு சம்பா சாகுபடி இலக்கை அடைய கேள்வி எழுந்துள்ளது.

You may also like

Leave a Comment

17 + 16 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi