வாலாஜாபாத்: வாலாஜாபாத் பேரூராட்சி செயல் அலுவலர் திடீரென பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். செங்கல்பட்டு மாவட்டம், கருங்குழி பேரூராட்சி செயல் அலுவலராக பணியாற்றி வந்தவர் கேசவன். இவர், பதவி உயர்வு பெற்று வாலாஜாபாத் பேரூராட்சி செயல் அலுவலராக கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு நியமிக்கப்பட்டார். இந்நிலையில், பதவி ஓய்வு பெற இருந்த கேசவன், நேற்றுமுன்தினம் திடீரென பணியிடை நீக்கம் செய்யப்பட்டது பேரூராட்சி செயல் அலுவலர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வாலாஜாபாத்தில் பேரூராட்சி செயல் அலுவலர் பணியிடை நீக்கம்
previous post