சென்னை: வி.பி.சிங் பிரதமராக இருந்தது 11 மாதங்கள் ஆனாலும் அவர் செய்த சாதனைகள் மகத்தானது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார். சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்புகள் வெளியிடுகிறார். அப்போது பேசிய முதலமைச்சர், வி.பி.சிங் உத்தரப்பிரதேசத்தில் மிகப்பெரிய ஜமீன்தார் குடும்பத்தில் பிறந்தவர். வி.பி.சிங்குக்கு திராவிட மாடல் அரசு மரியாதை செய்ய நினைக்கும் அறிவிப்புகளை வெளியிடுகிறேன். சமூகநீதி காவலர் வி.பி.சிங். பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஒன்றிய அரசு பணியிடங்களில் 27% இடஒதுக்கீட்டை அமல்படுத்தியவர் வி.பி.சிங் என்று குறிப்பிட்டார்.