சென்னை: வாக்கு பெட்டி வைக்கப்பட்டுள்ள மையங்களை 24 மணி நேரமும் அதிமுகவினர் கண்காணிக்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சுழற்சி முறையில் அதிமுக கூட்டணி கட்சியினரும் வாக்கு எண்ணும் மையங்களை கண்காணிக்க வேண்டும். மேலும், தேர்தல் பணியாற்றி தொண்டர்கள், நிர்வாகிகள், முகவர்கள், கூட்டணி கட்சியினருக்கு நன்றி என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.