Saturday, April 27, 2024
Home » ஆதம்பாக்கத்தில் இறகுபந்து விளையாட்டு திடல்: அமைச்சர் திறந்து வைத்தார்

ஆதம்பாக்கத்தில் இறகுபந்து விளையாட்டு திடல்: அமைச்சர் திறந்து வைத்தார்

by Ranjith

ஆலந்தூர்: ஆலந்தூர் 161வது வார்டு, லாயிட்ஸ் அவென்யூவில் ரூ.24 லட்சம் மதிப்பீட்டில் புதிய ரேஷன்கடை கட்டுவதற்கான பூமிபூஜை மற்றும் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுப்பந்து விளையாட்டு திடல் திறப்பு விழா நேற்று முன்தினம் நடந்தது. ஆலந்தூர் மண்டல குழு தலைவர் என்.சந்திரன் தலைமை வகித்தார். முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.எஸ்.பாரதி, மாமன்ற உறுப்பினர் ரேணுகா சீனிவாசன் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்துகொண்டு, ரேஷன் கடை கட்டும் பணியை பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தார். பின்னர், இறகுப்பந்து விளையாட்டு திடலை திறந்து வைத்து, இறகுப்பந்து விளையாடி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், ஆலந்தூர் வடக்கு பகுதி திமுக செயலாளர் பி.குணாளன், மண்டல உதவி செயற்பொறியாளர்கள் ரவிராஜன், சபாபதி, திமுக நிர்வாகிகள் கோல்டு பிரகாஷ், கே.ஆர்.ஜெகதீஸ்வரன் ஜெ.நடராஜன், கலாநிதி குணாளன், கோடீஸ்வரன், தினகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

You may also like

Leave a Comment

4 + 14 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi