விசாகப்பட்டினம்: விசாகப்பட்டினம் துறைமுகத்தில் பலஆயிரம் கோடி மதிப்புள்ள 25000 கிலோ போதை மருந்து பறிமுதல் செய்யப்பட்டது. ஆபரேஷன் கருடா திட்டத்தில் சர்வதேச அளவில் போதை மருந்து கடத்தலுக்கு எதிராக சிபிஐ நடவடிக்கை எடுத்து வருகிறது. விசாகப்பட்டினம் துறைமுகத்தில் கப்பலில் வந்த கண்டைனரை சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். கண்டெய்னரை சோதனை செய்ததில் 25 கிலோ பைகள் அடங்கிய 1000 பைகளில் போதை மருந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.