Sunday, May 12, 2024
Home » விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே சாலை விபத்து: கணவர் கண் முன்னே மனைவி, 2 குழந்தைகள் உயிரிழப்பு..!!

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே சாலை விபத்து: கணவர் கண் முன்னே மனைவி, 2 குழந்தைகள் உயிரிழப்பு..!!

by Nithya

விருதுநகர்: சாத்தூர் அருகே சாலை விபத்தில் கணவர் கண் முன்னே மனைவி, 2 குழந்தைகள் உயிரிழந்தனர். நெல்லை திசையன்விளை மன்னார்புரத்தை சேர்ந்தவர் ரிச்சர்ட் ராஜா, இவரது மனைவி மெர்லின், ரோஷினி என்ற மகளும், ரோகித் (13) என்ற மகன் உள்ளனர். ரிச்சர்ட் ராஜா கோயம்புத்தூரில் குடும்பத்துடன் தங்கியிருந்து வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் 4 நாட்கள் தொடர் விடுமுறையை முன்னிட்டு கடந்த 2 நாட்களுக்கு முன்பு ரிச்சர்ட் ராஜா தனது குடும்பத்துடன் சொந்த ஊரான திசையன்விளைக்கு காரில் வந்தார். பின்னர் விடுமுறை முடிந்து நேற்று இரவு அவர்கள் காரில் மீண்டும் கோவைக்கு புறப்பட்டனர்.

காரில் ரிச்சர்ட் ராஜா மற்றும் அவரது மனைவி, 2 குழந்தைகள், சகோதரர் ஜான்சன் ஆகியோர் பயணம் செய்தனர். இன்று காலை கார் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடியது. கடைசியில் கார் தடுப்புச்சுவரில் மோதி அதே வேகத்தில் தலைக்குப் புற கவிழ்ந்தது. அதில் பயணம் செய்த ரிச்சர்ட் ராஜாவின் மகன் ரோகித் காரின் இடி பாடுகளுக்குள் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

உயிருக்கு போராடிய மற்ற 4 பேரையும் அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே மெர்லின், ரோஷினி ஆகியோரும் பரிதாபமாக இறந்தனர். ரிச்சர்ட் ராஜா, ஜான்சன் ஆகிய 2 பேரும் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து தொடர்பாக சாத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் தாய், மகன், மகள் பலியானது அவர்களது குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

You may also like

Leave a Comment

7 − 1 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi