விழுப்புரம்: விழுப்புரம் மொரட்டாண்டி சுங்கச்சாவடியில் லாரி ஓட்டுநரிடம் பணம் வசூலித்த 2 காவலர்கள் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ரோந்து பணியில் ஈடுபட்ட உதவி ஆய்வாளர் பூமிநாதன், காவலர் அப்துல்ரஷீத் விழுப்புரம் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டனர். லாரி ஓட்டுரிடம் பணம் வசூலித்த வீடியோ சமூக வலைதளத்தில் பரவிய நிலையில் இருவரும் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.