விழுப்புரம்: விழுப்புரத்தில் சாலைவிபத்தில் இறந்த மூவரின் குடும்பத்திற்கும் தலா ரூ. 2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு தெரிவித்துள்ளார். கீழ்புத்துப்பட்டி அருகே கார் மோதி லட்சுமி, கோவிந்தம்மாள், கெங்கையம்மாள் ஆகியோர் உயிரிழந்தனர். புதுச்சேரி நோக்கிச்சென்ற கார் மோதி மீனவ பெண்கள் மூவரும் இறந்த செய்தியறிந்து வேதனையடைந்தேன் என்று முதலவர் வேதனை அடைந்தார்.