சென்னை: விஜயகாந்த் நம்முடன் இல்லை என்ற செய்தி கேட்டு பேரதிர்ச்சிக்குள்ளானேன் என்று ச.ம.க. தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார். என்றாவது ஒருநாள் குணமடைந்து, என்றும் போல் கேப்டன் மீண்டும் சுறுசுறுப்புடன் இயங்குவார் என எதிர்பார்த்தேன். என்னை போல், அவரை நேசித்த பல லட்ச மக்களை மறைவுச் செய்தி மீளாத்துயரில் ஆழ்த்திவிட்டது என்றும் அவர் கூறினார்.