சென்னை : சிறைவாசிகள் தொலைபேசி வாயிலாக குடும்பத்தினருடன் வீடியோ காலில் பேசும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சிறைவாசிகள் தொலைபேசி மூலம் குடும்பத்தினருடன் பேசுவதற்கான நேரத்தையும் அதிகரித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது. சிறைவாசிகள் இனி மாதத்துக்கு 8 முறைக்கு பதில் 10 முறை உறவினர், குடும்பத்தினருடன் பேசலாம்.சிறைவாசிகள் மாதத்துக்கு இனி 56 நிமிடங்களுக்கு பதில் 120 நிமிடம் வரை தொலைபேசியில் பேசலாம்.