Thursday, May 16, 2024
Home » உலகின் மிக வயதான மனிதர் காலமானார்

உலகின் மிக வயதான மனிதர் காலமானார்

by MuthuKumar

காராகாஸ்: உலகின் மிகவும் வயதான மனிதர் காலமானார். உலகின் மிகவும் வயதான மனிதர் என்று கடந்த 2022-ம் ஆண்டில் கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்ற வெனிசுலா நாட்டை சேர்ந்த ஜுவான் விசென்டே பெரெஸ் மோரா நேற்று முன்தினம் தனது 114 வயதில் காலமானார். ஜுவான் விசென்டே 2022, பிப். 4 அன்று கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றபோது அவருக்கு 112 வயது மற்றும் 253 நாட்கள்.

அப்போது அவர் உலகின்மிக வயதான மனிதராக அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டார். ஜுவான்
விசென்டே 11 குழந்தைகளுக்கு தந்தையாவார். 2022 நிலவரப்படி அவருக்கு 41 பேர குழந்தைகள், 30 கொள்ளு பேர குழந்தைகள் உள்ளனர். ஜுவான் விசென்டே 1909 மே 27ம் தேதி ஆன்டியன் மாகாணம் தச்சிராவில் உள்ள எல் கோப்ரே நகரில் பிறந்தார். 10 குழந்தைகளில் அவர் 9வது குழந்தையாக பிறந்தார். 5வது வயதில், தனது அப்பா மற்றும் சகோதரர்களுடன் சேர்ந்து விவசாய பணிகளை தொடங்கினார். கரும்பு, காபி ஆகியவற்றின் அறுவடைக்கு உதவியதாக கின்னஸ் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

eighteen − five =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi