மதுரை: வேங்கைவயல் விவகாரத்தில் DNA பரிசோதனையை எதிர்த்த வழக்கில் புதுக்கோட்டை ஆட்சியர் பதிலளிக்க உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. புதுக்கோட்டை எஸ்.பி., வழக்கை விசாரிக்கும் சிபிசிஐடி டிஎஸ்பியும் பதிலளிக்க உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. வேங்கைவயலை சேர்ந்த முத்துகிருஷ்ணன் என்பவர் தொடர்ந்த வழக்கு ஜூன் 1ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.