புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் மேல்நிலை நீர்த்தேக்க ெதாட்டியில் அசுத்தம் கலக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் குற்றவாளிகள் யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை. குற்றவாளிகளை அடையாளம் காணும் வகையில் அறிவியல் ரீதியான தடயங்களை சேகரிக்க அப்பகுதியை சேர்ந்தவர்களிடம் டிஎன்ஏ பரிசோதனை நடத்தி வருகின்றனர்.
இதுதொடர்பாக இதுவரை வேங்கைவயல், இறையூர் பகுதிகளை சேர்ந்த 25 பேரிடம் டிஎன்ஏ பரிசோதனை நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மேலும் 6 பேரிடம் டிஎன்ஏ பரிசோதனை நடத்த அனுமதி கோரி புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு கோர்ட்டில் சிபிசிஐடி போலீசார் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணையில் டிஎன்ஏ பரிசோதனைக்கு அனுமதி அளித்து கோர்ட் உத்தரவிட்டது.
இதையடுத்து ஒரு சிறுவன் உள்பட 6 பேருக்கும் இன்று புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டிஎன்ஏ பரிசோதனை நடத்தப்படுகிறது.