வேலூர்: வேலூர் அம்வாதம் கே.வி.குப்பம் அருகே கெம்மங்குப்பம் கிராமத்தில் தீண்டாமை வேலியை அகற்ற கோட்டாட்சியர் உத்தரவிட்டுள்ளார். அரசுக்கு சொந்தமான சுமார் 3 ஏக்கர் நிலத்தில் ஒரு தரப்பினர் சட்ட விரோதமாக வேலி அமைத்ததாக புகார் எழுந்தது. மற்றொரு தரப்பினர் கோட்டாட்சியர் வெங்கட்ராமனிடம் அளித்த புகாரையடுத்து வேலியை அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. இரு தரப்பினர் இடையே பேச்சுவார்த்தை நடத்தி, இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.