வேலூர்: வேலூரில் எருது விடும் விழாவில் உயிரிழந்த இளைஞர் ராம்கி குடும்பத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அளித்துள்ளார். படுகாயமடைந்த ராம்கி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த செய்தி கேட்டு வேதனை அடைந்தேன் என கூறினார். ராம்கியின் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். ராம்கியை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.