கோவை: வெள்ளியங்கிரி மலையில் பவுர்ணமியையொட்டி ஆன்மிக பயணம் மேற்கொண்ட இளைஞர் தவறி விழுந்து உயிரிழந்தார். திருப்பூரை சேர்ந்த 31 வயதான வீரக்குமார், வெள்ளியங்கிரி ஏழாவது மலையில் இருந்து இறங்கும் போது தவறி விழுந்தார். அவரை மீட்டு பக்தர்கள், வனத்துறையினர் கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். எனினும் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இளைஞர் வீரக்குமார் உயிரிழந்தார்.