சென்னை: வீரபாண்டிய கட்டபொம்மன் மக்கள் முன்னேற்ற இயக்கத்தின் முதன்மை நிர்வாகிகள் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நேற்று அளித்த பேட்டி: கடந்த 3ம் தேதி நடந்த எங்கள் இயக்கத்தின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில் வரும் மக்களவை தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து பல தொகுதிகளில் பிரசாரம் செய்தோம்.
வரும் தேர்தலில் 18 வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய உள்ளோம். சென்னையில் வீரபாண்டிய கட்டபொம்மன் சிலையை திறக்க வேண்டும் என நீண்ட நாட்கள் கோரிக்கை வைத்து வந்தோம். ஆனால் முதல்வர் மு.க.ஸ்டாலின் தான் அதை நிறைவேற்றினார். மேலும் சுதந்திர போராட்ட வீரர்களுக்காக பல திட்டங்களை செயல்படுத்தியுள்ளனர். அதனால் திமுகவுக்கு ஆதரவு அளிக்கிறோம்.