சென்னை: வேதாரண்யத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஒ.எஸ்.மணியன் வெற்றி பெற்றது செல்லும் என ஐகோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது. 2021-ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வேதாரண்யம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஓ.எஸ்.மணியன் வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் வேதரத்தினம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்திருந்தார். அதிகார துஷ்பிரயோகம் மூலம் நகராட்சி ஆணையர், டி.எஸ்.பி. உள்ளிட்டோரை தனது முகவர்கள் போல பயன்படுத்தியதாக புகார் தெரிவிக்கப்பட்டது. வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்ததை அடுத்து உயர்நீதிமன்ற நீதிபதி தண்டபாணி இன்று தீர்ப்பு வழங்கினார்.