நாகை: நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் போதை மறுவாழ்வு மையத்தில் முருகேசன் கொலை தொடர்பாக 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மறுவாழ்வு மைய நிர்வாகி மணிகண்டன், மேலாளர் வேல்முருகன், ஊழியர்கள் சாம்சுந்தர், தீபக்குமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மையத்தில் இருந்து தப்பிக்க முயன்ற நால்வரை பிடித்து கட்டி வைத்து அடித்ததில் முருகேசன் மரணம் என தகவல் வெளியாகியுள்ளது.