சேலம்: சேலம் மாவட்டம் வாழப்பாடியில் ஏரி வாய்க்காலை பாஜக பிரமுகர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். வாழப்பாடியில் மகேஸ்வரி திரையரங்கு அருகே 100க்கும் மேற்பட்ட விவசாயிகள், பொதுமக்கள் மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுப்பதாக வாழப்பாடி பேரூராட்சி கவுன்சிலர் கூறியதை அடுத்து மக்கள் கலைந்து சென்றனர்.