ஈரோடு: ஈரோடு மாவட்டம், அந்தியூர் வட்டம், வரட்டுப்பள்ளம் அணை பழைய ஆயக்கட்டு பகுதிகளின் பாசனத்திற்காக 28.01.2024 முதல் 11.02.2024 முடிய வரட்டுப்பள்ளம் நீர்த்தேக்கத்திலிருந்து பழைய ஆயக்கட்டு பகுதி ஏரிகளான கெட்டிசமுத்திரம் ஏரி, அந்தியூர் ஏரி, பிரம்மதேசம் ஏரி, வேம்பத்தி ஏரி மற்றும ஆப்பக்கூடல் ஏபி ஆகிய ஏரிகளுக்கு மொத்தம் 28.943 மில்லியன் கன அடிக்கு மிகாமல், தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது. இதனால் ஈரோடு மாவட்டம். அந்தியூர் மற்றும் பவானி வட்டங்களிலுள்ள 1039 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்