வால்பாறை : தென்மேற்கு பருவமழை வால்பாறை பகுதியில் பெய்து வருகிறது.கடந்த சில தினங்களாக மழை குறைந்து உள்ளது. எனவே வால்பாறை பகுதியில் பசுமையை காண சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. ஜூலை மாதம் வால்பாறை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் பருவமழை தீவிரம் அடைந்து கனமழை பெய்யத் துவங்கும். இவ்வருடமும் மழை இம்மாத துவக்கம் முதலே அதிகரித்து வருகிறது.
மழை அதிகரிப்பால் வால்பாறை பகுதி எங்கும் அருவிகள், நீரோடைகள், ஆறுகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. கனமழையால் சுற்றுலா பயணிகள் வரத்து குறைந்திருந்த நிலையில், தற்போது மழை குறைந்துள்ள நிலையில் வரத்து அதிகரிக்கத் தொடங்கி உள்ளதாக சுற்றுலா தொழிலை நம்பியுள்ள விடுதிகளின் உரிமையாளர்கள் தெரிவித்து உள்ளனர்.