சென்னை: அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் டிவிட்டர் பதிவு: கடலூர் மாவட்டம் வடலூரில் வள்ளலாரின் தெய்வீகப் பணிகளுக்காக அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் தானமாக வழங்கிய நிலத்தில் அமைக்கப்பட்ட பெருவெளியில், தமிழக அரசு சார்பில் சர்வதேச மையம் அமைக்கும் பணியை எதிர்த்து அப்பகுதி மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அங்கு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கட்டுமானப் பணிகள் தற்போது காவல்துறை பாதுகாப்புடன் தொடங்கியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. வள்ளலாரின் கொள்கைக்கும், பக்தர்களுக்கும் எதிரான வகையில் நடைபெறும் சர்வதேச மையம் அமைக்கும் பணிகளை உடனடியாக நிறுத்தி, கடலூர் மாவட்டத்திலேயே மாற்று இடத்தை தேர்வு செய்து அதற்கான பணிகளை தொடங்க வேண்டும்.