மதுராந்தகம்: காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம் மதுராந்தகம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில், கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் மற்றும் ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி வையாவூர் ஊராட்சி மாம்பட்டு கிராமத்தில் இன்று மாலை நடக்கிறது. இதையொட்டி திமுக கொடி, வாழை தோரணம், பொதுக்கூட்ட மேடை ஆகியவை அமைக்கப்பட்டு கிராமமே விழா கோலம் பூண்டுள்ளது. கூட்டத்திற்கு, காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ தலைமை தாங்குகிறார். ஒன்றிய தலைவர் ஆறுமுகம், மாவட்ட விளையாட்டுத்துறை துணை செயலாளர் தினேஷ்குமார், முன்னாள் ஊராட்சி தலைவர்கள் அமுதா ஏழுமலை, எஸ்.ஏழுமலை, மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் மணிகண்டன், வையாவூர் ஊராட்சி தலைவர் காமராஜ், கிளை செயலாளர்கள் கமலக்கண்ணன், ராஜா, வெங்கடேசன், பாபு, சீனிவாசன், வெங்கடேசன், மணிகண்டன், தங்கபாண்டியன், கோவிந்தன், தியாகராஜன், தணிகாசலம், சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.
ஒன்றிய செயலாளர் சத்யசாய் வரவேற்கிறார். நிகழ்ச்சியில், வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி கலந்துகொண்டு சிறப்புரையாற்றி ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். காஞ்சிபுரம் எம்பி ஜி.செல்வம், ஒன்றிய நிர்வாகிகள் தனசேகரன், தமிழரசன், சித்ரா திருஞான செல்வம், தேவராஜ், மணியன், பார்த்தசாரதி, சுந்தரவரதன், கருங்குழி பேரூர் செயலாளர் சுந்தரமூர்த்தி, பேரூராட்சி தலைவர் தசரதன், துணை தலைவர் சங்கீதா சங்கர் மற்றும் ஒன்றிய, பேரூர் கழக நிர்வாகிகள் கலந்துகொள்கின்றனர். ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் துர்கேஷ் நன்றி உரையாற்றுகிறார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மதுராந்தகம் வடக்கு ஒன்றிய திமுக நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.