சென்னை : அரசு போக்குவரத்துக் கழகத் தொழிலாளர் கோரிக்கைளை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்று தமிழக அரசுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தி உள்ளார்.15வது ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தையை உடனடியாகத் தொடங்க வேண்டும் என்றும் ஓய்வுபெற்ற தொழிலாளர்களின் பண பலன்களை உடனே வழங்க வேண்டும் என்றும் வைகோ குறிப்பிட்டுள்ளார்.