திருவண்ணாமலை: வைகாசி மாத பௌர்ணமியை ஒட்டி அண்ணாமலையார் கோயிலில் 3 முதல் 5மணி நேரம் பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். அண்ணாமலையார் கோயிலில் வைக்கப்பட்டிருந்த தடுப்பு வேலிகளை தூக்கி எறிந்து பக்தர்கள் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆயிரக்கணக்காண பக்தர்கள் அம்மணி அம்மன் கோபுரம் வழியில் குவிந்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.